தனுஷ் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன்!

“நாங்கள் இருவரும் இணைந்து சில மாயாஜால தருணங்களை உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன்” என ‘தேரே இஷ்க் மே’ படத்தில் தனுஷுடன் பணியாற்றியது குறித்து க்ரிதி சனோன் நெகிழ்ச்சி. ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் நவம்பர் 28 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘தேரே இஷ்க் மே’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த, பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில், அதன் டிரெய்லரும் பெரும் வரவேற்பை பெற்றதாலும், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன்க்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பற்றி ரசிகர்கள் பேசுவதை நிறுத்தவில்லை; இந்த புதிய ஜோடி, படம் வெளியாவதற்கு முன்பே ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது. இந்த உற்சாக அலையில் பயணிக்கும் க்ரிதி சனோன், தனுஷுடனான தனது துடிப்பான நடிப்பு அனுபவத்தை பற்றி மனம் திறந்துள்ளார்; இது படத்தின் பல மறக்க முடியாத தருணங்களை வடிவமைத்த வலுவான படைப்பு பிணைப்பை வெளிப்படுத்துகிறது.

தனுஷுடன் பணியாற்றிய தனது அனுபவத்தை பற்றி பேசிய க்ரிதி சனோன், “நான் தனுஷை ஒரு நம்ப முடியாத நடிகர் என்று நினைக்கிறேன்; நான் எப்போதும் அவரது திறமை மற்றும் நடிப்பிற்கு ரசிகையாக இருந்திருக்கிறேன். அவர் தனது நடிப்பில் மிகவும் வலுவான பிடிப்பை கொண்டிருப்பதாக உணர்கிறேன். அவர் மிகவும் நுணுக்கமானவர்; அவர் பல படங்களையும் இயக்கியுள்ளார், மேலும் காட்சிகள் மற்றும் அது திரையில் எப்படி வெளிப்படும் என்பது பற்றிய மிகுந்த அனுபவத்துடனும் புரிதலுடனும் வருகிறார். அவர் தனது கதாபாத்திரத்தில் பல அடுக்குகளை வெளிக்கொண்டு வருகிறார், அவருடன் பணியாற்ற நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய ஒரு நடிகருடன் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு தெரியும்… அதுதான் நடந்தது. நாங்கள் இதற்கு முன்பு சந்தித்ததில்லை, படத்தில் வரும் சங்கர் மற்றும் முக்தி கூட ஒரு கட்டத்தில் சந்தித்ததில்லை, அதனால் அது சரியாக அமைந்தது!” என்று பகிர்ந்து கொண்டார்.

மேலும், அவர்களது ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி மற்றும் சக்திவாய்ந்த நடிப்பை உருவாக்கும் செயல்முறை பற்றி தொடர்ந்து, அவர் கூறுகையில், “எங்களிடம் சில மிகவும் தீவிரமான காட்சிகள் உள்ளன, மிக நீண்ட காட்சிகள், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படும்போது அவை வெளிப்படக்கூடும். அவர் ஒரு நடிகராக மிகவும் ஒத்துழைப்புடன் இருக்கிறார் மற்றும் மிகவும் உதவியாக இருக்கிறார். நாம் இருவரும் இணைந்து சில மாயாஜால தருணங்களை உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன், அந்த காட்சி நடந்த போது அதை உணர்ந்தோம். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து, ‘அது ஒரு நல்ல காட்சி!’ என்று சொல்லிக்கொள்வோம். அவருடன் பணியாற்றுவதை நான் மிகவும் ரசித்தேன், எதிர்காலத்தில் நாங்கள் இன்னும் நிறைய பணியாற்ற வேண்டும் என்று நம்புகிறேன்,” என்றார்.

ஷங்கர் மற்றும் முக்தியின் உணர்ச்சிப்பூர்வமான கெமிஸ்ட்ரி மற்றும் அழுத்தமான வசனங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ‘தேரே இஷ்க் மே’ இந்த ஆண்டின் மிகவும் ஈர்க்கக்கூடிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது.

குல்ஷன் குமார், T-சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் வழங்கும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் L ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்க, பூஷன் குமார் மற்றும் கிருஷண் குமார் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய திரைக்கதையுடன் ஆனந்த் L ராய் இயக்கியுள்ள இப்படம், AR ரஹ்மான் இசையமைப்பில், ஈர்ஷாத் காமில் பாடல் வரிகளுடன் உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வரும் நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading