கபுள் பிரண்ட்லி ; விமர்சனம்

 

சென்னையில் இன்டீரியர் டெக்கரேஷன் ஆர்டர் எடுப்பதற்காக முயற்சி செய்யும் சந்தோஷ் சோபனுக்கு யாரும் ஆர்டர் தர முன்வரவில்லை. அதனால் பார்ட் டைம் ஆக பைக் டாக்ஸி ஓட்டுகிறார். அப்போது நாயகி மானசா இவரது பைக் டாக்ஸியில் அடிக்கடி பயணம் செய்கிறார். ஊரில் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என பயந்து இங்கேயே வேலை தேடிக்கொண்டு சுற்றுகிறார் மானசா.

ஒரு கட்டத்தில் அவருக்கு தங்கும் விடுதியில் இடமில்லாமல் போக நாயகன் சந்தோஷ் சோபன் அறையிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன்பிறகு வேறு என்ன ? காதல் தான். ஆனால் அந்த காதலில் இவர்கள் எதிர்கொள்ளும் வித்தியாசமான பிரச்சனை தான் இந்த படத்தை நம் மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறது. அது என்ன என்பது நீதிக்கதை

சிவாவாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன் அந்தப் பாத்திரத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரது தோற்றம் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்  மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் கனமான உணர்ச்சிக் காட்சிகளில் இவரது நடிப்பு பார்ப்பவர்களின் மனதைத் தொடும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

நாயகி: மானசா வாரணாசி தனது மயக்கும் நடிப்பால் படம் முழுவதும் ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார். சந்தோஷ் சோபன் மற்றும் மானசா வாரணாசி ஆகிய இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி திரையில் பார்ப்பதற்கு மிக அழகாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் உள்ளது.

நகைச்சுவை நடிகர் யோகி பாபு படத்தில் இருந்தும் கதையின் தன்மை கருதி, நகைச்சுவைக்கு இந்தத் திரைப்படத்தில் பெரிய இடமில்லை..

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் பார்வையாளர்களின் மனதைத் தொடும் வகையில் உள்ளது.

பொதுவாக இது போன்ற காதல் கதைகளில் பாடல்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால், இப்படத்தில் மனதில் நிற்கும் வகையிலான பாடல்கள் எதுவும் அமையவில்லை என்பது ஒரு குறை. அதேசமயம் பின்னணி இசை கதையின் உணர்வை மேம்படுத்துகிறது.

அதேபோல் ஒளிப்பதிவும் படத்தின் காட்சி அமைப்புகளுக்கு வலு சேர்க்கிறது. சுருக்கமாகச் சொன்னால், படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களில் ஒளிப்பதிவாளரின் பணி பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளதுகுறைகள்.

அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை எளிதில் கணிக்கக்கூடிய வகையில் உள்ளது மற்றும் இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகம் சற்று மெதுவாக உள்ளது அதேசமயம் வேலையில்லாத இளைஞனின் வலியையும், தனது காதலிக்காக எதையும் செய்யும் ஒரு காதலனின் உணர்ச்சிகளையும் படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக, இது இளைஞர்கள் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading