சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’: மதுரையில் விறுவிறுப்பாகத் தொடங்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

 

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். கதை அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேறுவதோடு, பல முக்கியக் காட்சிகள் இடம்பெறுவதால் படக்குழுவினர் அதன் தனித்துவமான உலகத்தை உயிர்ப்பிக்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from 2K CINEMA

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading